வியாழன், 4 நவம்பர், 2010

திருமறையின் தோற்றுவாய்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (தொடங்குகின்றேன்)

1. அனைத்துப்புகழும் அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.

2. (அவன்) அளவற்ற அருளாளன்; நிகரற்ற அன்புடையோன்.

3. (அவனே நியாயத்) தீர்ப்பு நாளின் அதிபதி(யும் ஆவான்).

4. (இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

5. நீ எங்களை நேர் வழியில்நடத்துவாயாக!

6. (அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி.

7. (அது) உன் கோபத்துக்குஆளானோர் வழியுமல்ல,நெறி தவறியோர் வழியுமல்ல.

-அல்குர்ஆன்1:1-7

1 கருத்து:

  1. மாஷா அல்லா!!, உங்கள் ப்ளாக் கை
    திருமறையின் தோற்றுவாய் உடன் துவங்கியமைக்கு வாழ்த்துக்கள்.. உங்கள் வலைப்பூவில் நிறைய எழுதுங்கள்!!!

    பதிலளிநீக்கு